நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமனம் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

1 Min Read

சென்னை,டிச.21- நெல்லை உள் ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி சீரமைப்புப் பணிகளை மேற் கொள்ள அதிகாரிகள் நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது. வரலாறு காணாத மழையால் பள்ளிகள் சேதமடைந்துள்ள நிலையில் விடு முறைக்கு முன்பு சீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. வெள்ளத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக் கப்பட்ட நிலையில் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்துள்ளனர். அதிகாரிகள் நாளை முதல் கண்காணிப்புப் பணிகளை தொடங்கவும் உத்தரவு அளித்துள்ளது.
தென்மாவட்டங்களில் கடந்த 17ஆம் தேதி தொடங்கிய கனமழை தொடர்ந்து 15 மணி நேரம் கொட்டித் தீர்த்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆற்றங்கரையோர பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. ஆற்றில் இருந்து வெளியேற் றப்பட்ட தண்ணீர் கால்வாய்கள் வழியாக குளங்களுக்கும் சென்ற தால், கால்வாய்கள், குளங்களிலும் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங் களில் நூற்றுக்கணக்கான கிரா மங்கள் தண்ணீரால் சூழப்பட்டன.

இதனால் இவ்விரு மாவட் டங்களிலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடி யாத நிலைக்கு தள்ளப்பட்டனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் படகுகள் மூலம் மீட்புப் பணிகள் நடந்தன. பல்வேறு இடங்களில் பாலங்கள் உடைந்ததால், கிராமங்கள் தீவுகளாக மாறின. நகர்புறங்களிலும், கிராமப்புறங் களிலும் வெள்ளநீர் வடியத் தொடங்கிய நிலையில், நெல்லை மாவட்டம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளது
இந்தநிலையில் நெல்லை உள் ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி சீரமைப்புப் பணிகளை மேற் கொள்ள அதிகாரிகளை நியமனம் செய்துள்ளனர். பள்ளிகள் சேத மடைந்துள்ள நிலையில் விடு முறைக்கு முன்பு சீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் பள்ளிகளில் மின்சாரம், குடிநீர், கழிப்பறை, போன்ற அடிப்படை வசதிகளை சீரமைக்க வேண்டும் என்று அதற்கான அதிகாரிகளை பள்ளிக் கல்வித்துறை நியமித்துள் ளது. நியமனம் செய்த அதிகாரிகள் நாளை முதல் பள்ளி சீரமைப்புப் பணிகளை கண்காணிக்க வேண் டும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *