தூத்துக்குடியில் வௌ¢ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் களப்பணியில் கனிமொழி எம்.பி.,

2 Min Read

தூத்துக்குடி,டிச.21- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது சொந்த நிதியின் மூலம் தினமும் 25,000 பேருக்கு சுடச் சுட உணவு வழங்கி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் தங்கள் உடைமைகளை இழந்து சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். ஒரு சிலர் வீடு களை விட்டு வெளியேற முடியா மல் தவித்து வருகின்றனர். இவர் களுக்காக கடந்த 3 நாட்களாக உணவு சமைத்து விநியோகம் செய்து வருகிறார் கனிமொழி.
பெரிய, பெரிய பாத்திரங்களில் லெமன் சாதம், பிரிஞ்சி சாதம் என வகைச் சோறுகள் சமைக்கப்பட்டு சுடச் சுட அவைகள் வேனில் எடுத்துச்செல்லப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படுகின்றன. கனிமொழி எம்.பி.யின் சொந்த செலவில், தனிப்பட்ட முயற்சியில் இது முன்னெடுக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகமும், மாநகராட் சியும் உணவு விநியோகம் செய்தா லும் கூட அவர்களுக்கு பக்கபல மாக தூத்துக்குடி தொகுதி எம்.பி. என்ற முறையில் கனிமொழியும் தனது பங்களிப்பை செய்து வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை இப்போது தான் படிப்படியாக மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக் கிறது. நேற்றைக்கு இன்று பரவாயில்லை என்று சொல்லும் அள வுக்கு சிறியளவில் தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளது. இருப்பினும் முழுமையாக வெள்ள நீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற் கொண்டு வருகிறது. அமைச்சர் நேரு தூத்துக்குடியிலேயே முகாமிட்டு நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்.
தூத்துக்குடியை போலவே கோவில்பட்டி, சிறீவைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் உணவு சமைத்து கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனி மொழி உணவு வழங்கி வருகிறார். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் நேற் றைக்கு முன் தினமெல்லாம் தூத்துக்குடியில் உணவு சமைத்து விநியோகம் செய்யும் அளவுக்கு நிலைமை இல்லை. அந்தளவுக்கு மிக மோசமாக இருந்தது.
இதனால் மதுரையில் உணவு சமைக்கப்பட்டு அதனை 2 மணி நேரத்தில் மின்னல் வேகத்தில் வேனில் ஏற்றிச் சென்று உணவு விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *