ஊருக்குத்தான் உபதேசமா? 32 ஆண்டுகால மதுவிலக்கு கொள்கையை கைவிட்டது மணிப்பூர் பா.ஜ.க. அரசு

viduthalai
2 Min Read

இம்பால்,டிச.19- வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப் பூரில் 1970-ஆம் ஆண்டில் மது விலக்குக்கான போராட்டங்கள் தொடங்கின. 21 வருடங்களாக நீடித்த போராட்டத்திற்கு பிறகு 1991இல் மணிப்பூர் மக்கள் இயக்க கட்சி சார்பில் மாநில முதலமைச் சராக இருந்த ராஜ்குமார் ரன்பீர் சிங் மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினார். ஆனால், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினரின் பாரம்பரிய மது தயாரிப்புக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங் கப்பட்டது.
இந்நிலையில், சட்டவிரோத கள்ளச் சாராயத்தைக் கட்டுப் படுத்துவதாக கூறி 32 ஆண்டு களாக நிலுவையில் இருந்த மணிப்பூர் மாநிலத்தின் மது விலக்கு கொள்கையை ஆளும் மாநில பா.ஜ.க. அரசு கைவிடுவ தாக அறிவித்து, மதுபான தயா ரிப்பு, விற்பனையை ஒழுங்கு படுத்த மணிப்பூர் மதுபானங் களுக்கான அரசு நிறுவனம்
(MSBCL) என்ற பெயரில் அரசு நிறுவனம் ஒன்றையும் உருவாக்கி யுள்ளது. மணிப்பூர் அரசின் இந்த அறிவிப்பையடுத்து மாநி லம் முழுவதும் கடும் எதிர்ப்பலை கிளம்பியுள்ளது.

ஓராண்டாக மறைமுக திட் டத்தில் இருந்த பைரன் சிங்
மணிப்பூர் மாநில முதல்வ ராக பைரன் சிங் 2022இல் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
முதலமைச்சர் பதவியில் அமர்ந்ததும் மதுவிலக்கு கொள் கையை தளர்த்தி 50% அளவில் மதுபான கடைகளைத் திறக்க அம்மாநில அரசு முடிவு செய் திருந்தது. ஆனால், வன்முறையால் இந்த திட்டம் சரியாக அமல்படுத்த முடியாத சூழலில், தற்பொழுது 32 ஆண்டுகால மதுவிலக்கு கொள்கையை கை விட்டு ஓராண்டாக திட்டமிட்டு இருந்த மறைமுக திட்டத்தை அமல்படுத்தியுள்ளார் பா.ஜ.க. முதலமைச்சர் பைரன் சிங்.

சமூக வலைத்தளங்களில்
வறுபடும் பா.ஜ.க.
தமிழ்நாடு அரசை விமர்சிக்க குற்றச்சாட்டுகள் இல்லாததால் பா.ஜ.க. டாஸ்மாக் மதுபான கடைகளை பற்றி எதையாவது கூறி அரசியல் ஆதாயம் தேடு வது வழக்கம்.
இத்தகைய சூழ லில் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் 32 ஆண் டுகளாக நிலுவையில் இருந்த மதுவிலக்கு கொள்கையை கை விட்டது ஏன்? என பல்வேறு விமர்சனங் களுடன் பா.ஜ.க. சமூக வலைத் தளங்களில் வறுபட்டு வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *