எம்.பி.க்கள் இடைநீக்கத்தை எதிர்த்து “இந்தியா” கூட்டணி ஆர்ப்பாட்டம்!

1 Min Read

சோனியாகாந்தி பங்கேற்பு

புதுடில்லி, டிச.17- 14 நாடாளுமன்ற உறுப்பி னர்கள் இடைநீக்கத்தை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத் தினர்.
அதில் சோனியா காந் தியும் கலந்து கொண் டார்.
சோனியாகாந்தி
நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பிரதமர் மோடி, ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அறிக்கை தாக் கல் செய்ய வலியுறுத்தி யதால் நாடாளுமன் றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த எதிர்க்கட்சிக ளின் உறுப்பினர்கள் 14 பேர் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே நேற்று (15.12.2023) ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
அதில், நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் கலந்து கொண்டார்.
இடைநீக்கம் செய்யப் பட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அவர்கள், ‘நாங்கள் பேசி யதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளோம்.
ஆனால், குற்றவாளி யான பாரதிய ஜனதா மக்களவை உறுப்பினர் சுதந்திரமாக நடமாடு கிறார்” என்று எழுதப் பட்ட பதாகைகளை கையில் பிடித்திருந்தனர்.
திரிணமுல் காங்கிரஸ் உறுபபினர் டெரிக் ஓபி ரையன் ஆர்ப்பாட்டத் தில் பங்கேற்றார்.
இடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் உறுப்பினர்ககள் கோரிக்கை விடுத்தனர்.
இடைநீக்கம் செய்யப் பட்ட காங்கிரஸ் மக்க ளவை உறுப்பினர் ஹிபி ஈடன் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:-
இடை நீக்கமும், வெளியேற்றமும் இந்த அரசுக்கு புதிதல்ல. கடந்த வாரம், திரிணாமுல் காங்கி ரசை சேர்ந்த மகுவா மொய்த்ராவின் மக்க ளவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.
இந்த வாரம், அத்து மீறலில் ஈடுபட்டவர்க ளுக்கு ‘பாஸ்’ வாங்கி கொடுத்த பா.ஜனதா உறுப்பினர் பிரதாப் சிம்ஹா சுதந்திரமாக நட மாடுகிறார்.
ஆனால், பிரதமரும், ஒன்றிய உள்துறை அமைச் சரும் அவையில் பேச வேண்டும் என்ற இந்திய மக்களின் நியாயமான கோரிக்கையை எழுப்பிய தற்காக நானும், என் சகாக்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறி னார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *