எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் “ஜனநாயகத்துக்கு எதிரானது” மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

1 Min Read

புதுடில்லி, டிச. 16 – நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சி உறுப் பினர்கள் இடைநீக்கம் செய்யப் பட்ட நிகழ்வுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியா

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில், “நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மீறல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என கோரியதற்காக 14 எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஜன நாயகத்துக்கு எதிரானது; அவர்கள் செய்த குற்றம் தான் என்ன?
பாதுகாப்புக் குளறுபடி குறித்து விவாதம் நடத்தக் கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவையில் விளக்க மளிக்க வலியுறுத்தியது குற்றமா..? ஆபத்தான பாதுகாப்பு மீறல் குறித்து விவாதம் நடத்த கோரியது குற்றமா..?

இந்த நடவடிக்கை தற்போதைய காலகட்டத்தின் ஒரு அடையாளமான சர்வாதிகாரத்தின் கொடூரமான தன் மையை காட்டவில்லையா..?” என்று அதில் மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *