கோவை, அக். 23- தமிழ் நாட்டில் காற்றாலை மூலம் 9,000 மெகாவாட் மற்றும் சூரியஒளி மூலம் 4,500 மெகாவாட் மின் சாரம் உற்பத்தி செய்வதற் கான கட்டமைப்புகள் உள்ளன. மாநிலத்தின் தினசரி மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட் முதல் 18 ஆயிரம் மெகா வாட்டாகும்.
சூரியஒளி மின் உற் பத்தி குறித்து தமிழ்நாடு சூரியஒளிஆற்றல் மின்உற்பத்தியாளர்கள் சங்கப் (டான்ஸ்பா) பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா செய்தியாளரி டம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். எனவே, சூரியஒளி மின் சாரத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யவும், இது தொடர்பான திட்டங் களை மக்களிடம் கொண்டு செல்லவும் தமிழ்நாடு அரசு உதவ வேண்டும்.
தமிழ்நாட்டில் 2 கோடி மின் இணைப்புக ளுக்கு (வீடு, தொழில் நிறுவனம் உள்ளிட்ட அனைத்து பிரிவும்) சேமிப்பு வசதியுடன் கூடிய, தலா 2 கே.வி. திறன் கொண்ட மேற் கூரை சூரியஒளி மின் உற்பத்தி கட்டமைப்பு அமைக்க அரசு உதவ வேண்டும்.
இதற்கு வீட்டுக்கு தலா ரூ.2 லட்சம் செல வாகும். ஒரு மின் இணைப்பு மூலம் தின மும் தலா 10 யூனிட் மின் சாரம் உற்பத்தி செய்ய லாம். இதனால் 20 கோடி யூனிட் மின்சாரத்தை (2 ஆயிரம் மெகாவாட்) தினமும் உற்பத்தி செய்ய முடியும்.
சேமிப்பு வசதி இருந்தால், மின்வாரியம் சூரியஒளி மின்சாரத் தைப் பெற்றுக்கொண்டு, தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும், காலை 6 மணி முதல் 9 மணி வரையும் (உச்ச பயன்பாட்டு நேரங்களில்) மின் விநி யோகம் செய்ய உதவும். இந்த திட்டத்தை செயல் படுத்துவதற்காக மின் இணைப்பு வைத்துள்ள வர்கள் ஒவ்வொருவ ருக்கும் ஆண்டுதோறும் 3,650 யூனிட்மின்சாரம் கழித்துக்கொள்ளலாம். அரசே நேரடியாகவோ அல்லது தனியார் பங்களிப் புடனோ இந்த திட்டத்தை செயல்படுத்தலாம்.
அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய இதுபோன்ற திட் டங்களைச் செயல்படுத் துவது மிகவும் அவசிய மாகும். இவ்வாறு அவர் கூறினார்.