சாமியார் ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில் பெண் நீதிபதிக்கே பாதுகாப்பில்லை!

viduthalai
2 Min Read

தற்கொலை செய்ய அனுமதிக்குமாறு
தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய பெண் நீதிபதி!

புதுடில்லி, டிச.16 நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தாகப் புகார் தெரி வித்து மாவட்ட பெண் நீதிபதி ஒருவர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நிலை குறித்த அறிக்கையை அளிக்குமாறு அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பண்டா மாவட்ட நீதிமன்ற பெண் நீதிபதி இரண்டு பக்க புகார் கடிதத்தை எழுதியுள்ளார்.
அதில் அவர்கூறியிருப்பதாவது:
‘‘உத்தரப்பிரதேச மாநிலம் பரபங்கி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிய மர்த்தப்பட்டபோது, மூத்த நீதிபதி ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அங்கு பணியாற்றிய கடந்த ஒன்றரை ஆண்டுகளும் நடைப்பிணமாக மாற்றப் பட்டேன். இத்தகைய ‘ஆன்மா’வற்ற, உணர் வற்ற உடலை இனியும் தாங்கிக் கொண்டு உயிர் வாழ்வதில் எந்தவிதப் பயனும் இருக்கப் போவதில்லை. எனது வாழ்வில் இனி எந்தவிதக் குறிக்கோளும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இனி உயிர்வாழ விரும்ப வில்லை. எனவே, கண்ணியமான முறையில் எனது உயிரை முடித்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்
இந்த கடிதம் சமூக ஊடகங்களில் வைர லாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்ற வட்டாரங்கள் கூறுகையில்,
‘இந்தப் பாலியல் துன்புறுத்துல் தொடர்பாக பெண் நீதிபதி ஏற்கெனவே அலாகாபாத் உயர்நீதிமன்ற உள் புகார்கள் குழுவிடம் அளித்த புகார் மீதான விசாரணை நிலை குறித்த அறிக்கையை அளிக்குமாறு உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதியின் உத்தரவின் பேரில் அலாகாபாத் உயர்நீதிமன்ற பதி வாளரை, உச்சநீதிமன்ற செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்’ என்று தெரி வித்தனர்.
முன்னதாக, இந்தப் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பெண் நீதிபதி சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற உள் புகார்கள் குழு ஏற்கெனவே விசாரணை மேற்கொண்டு, அதுதொடர்பாக தீர்மானமும் நிறை வேற்றப்பட்டு அலாகாபாத் உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதைக் குறிப்பிட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *