விலைவாசியை கட்டுப்படுத்த தவறிய பிரதமர்: மோடிமீது காங்கிரசு சாடல்

viduthalai
1 Min Read

புதுடில்லி, டிச. 15- கடந்த 9 ஆண்டுகளில் நாட்டுக்கு கிடைத்த ஒரே உத்தர வாதம், பணவீக்கத்துக் கான உத்தரவாதம் தான் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத் தில், “இப்போதெல்லாம், பிரதமர் மோடியின் உத் தரவாதங்கள் பற்றி பா. ஜனதா பேசி வருகிறது. அவர்களின் மற்ற உத்தர வாதங்கள் பற்றி தெரி யாது. ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் நாட்டுக்கு கிடைத்த ஒரே உத்தரவா தம், பணவீக்கத்துக்கான உத்தரவாதம் ஆகும். இந்த அரசின் தவறான கொள்கைகளால், பண வீக்கம் ஏற்கெனவே 45 ஆண்டுகால சாதனையை முறியடித்து விட்டது.
அத்தியாவசிய பொருட் களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. உணவு பொருட்களின் விலை உயர்வால், சில் லறை பணவீக்கம் 5.5 சதவீதமாக உயர்ந்து விட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பிரதமர் மோடி முற்றி லும் தவறி விட்டார்.
இந்த தோல்வியை மறைக்கவே அவர்கள் பல்வேறு பிரச்சினை களை எழுப்பி வருகின்ற னர்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *