கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 14.12.2023

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
• நாடாளுமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நாளில் மக்களவையில் கலர் குண்டுவீசி தாக்குதல் – 2 வாலிபர்களை எம்.பி.க்கள் மடக்கிப் பிடித்தனர் – சதிச் செயலில் ஈடுபட்ட பெண் உள்பட 5 பேர் கைது.

தி ஹிந்து:
• பட்டியல் ஜாதிகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு 15(4) மற்றும் 16(4) பிரிவின் கீழ் வழங்கப்படும் இடஒதுக்கீட்டிற்கு மட்டுமே 50 சதவீத உச்சவரம்பு பொருந்தும்; உயர்ஜாதி அரிய வகை ஏழை களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு பொருந்தாது, நாடாளு மன்றத்தில் ஒன்றிய அரசு புதுமையான விளக்கம்.
• பண மதிப்பிழப்பு நடவடிக்கை, மாநிலங்களுக்கான அதிகார குறைப்பு என நமது நாடு உள்ளேயே கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது என்கிறார் எழுத்தாளர் அருந்ததி ராய்

தி டெலிகிராப்:
•மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின் போது, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவில் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை விளக்குமாறு தர்மேந்திர பிர தானை திமுக தலைவர் திருச்சி சிவா வலியுறுத்தல்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *