மோடியா பேசுவது?

Viduthalai
0 Min Read

நாட்டைப் பிளவுபடுத்தும் சக்திகளை வேரறுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

அப்படியென்றால், ஜாதிக்கு ஆதாரமாக இருக்கும் வேதங்களை, கீதையை, மனுதர்மத்தை, சங்கர மடங்களை என்ன செய்ய உத்தேசம்?

ஆங்காங்கே ஜாதித் தலைவர்களைப் பிடித்து கட்சிக்குள் கொண்டுவந்து வாக்கு அரசியல் நடத்தும் பி.ஜே.பி.,யா இதைப்பற்றியெல்லாம் பேசுவது?

தமிழ்நாட்டு ஆளுநர் ரவி, பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்துவது, ஜாதி ஒழிப்புக்கான திட்டமா?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை உண்டு என்று மோடி அரசு இந்திய அளவில் சட்டம் கொண்டு வருமா?

பி.ஜே.பி. என்ற ஓநாய் சைவமாகிவிட்டதா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *