கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாள் விழா

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

குமரிமாவட்ட கழகம் சார்பாக கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாள் விழா (2.12.2023) கருத்தரங்கம் மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத் தில் நடைபெற்றது. தந்தை பெரியார், தலைவர் கி.வீரமணி நூல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன், முன்னிலை வகித்து கருத்துரையாற்றினார். கழகக் காப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெரு மாள், பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ சிவதாணு, செயலாளர் பெரியார்தாஸ், செயலாளர் பா. பொன்னுராசன்; இளைஞர் அணி தலைவர் இராஜேஷ், தோவாளை ஒன்றிய தலைவர் மா.ஆறுமுகம் மற்றும் பெரியார் பற்றாளர்கள் விழாவில் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *