போக்குவரத்து துறை, மின்வாரியம் உள்பட பொதுத்துறை பணியாளர்களுக்கு 20 விழுக்காடு ஊக்கத் தொகை : தமிழ்நாடு அரசு அறிவிப்பு

3 Min Read

சென்னை, அக்.27 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 20 சதவீத ஊக்கத் தொகை வழங்க முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இழப்பில் இயங்கும்பொதுத் துறை நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு10 சதவீத ஊக்கத் தொகை வழங் கப்படும். இதன்மூலம் மொத்தம் 2.84 லட்சம் தொழிலாளர் களுக்கு ரூ.403 கோடி ஊக்கத் தொகை மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுநேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருத்தப்பட்ட ‘போன்ஸ்’ சட்டம் 2015இ-ன்படி, ஊக்கத் தொகை பெற தகுதியான ஊதிய உச்சவரம்பு ரூ.21,000 என உயர்த்தப்பட் டுள்ளது. ஊக்கத் தொகை கணக்கீட்டுக்கான மாதாந்திர உச்ச வரம்பும் ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 2022-_2023-ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை யானது லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களில் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் 11.67 சதவீ தம்கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீதம் வரை ஊக்கத் தொகை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

பொதுத்துறை நிறுவனங் கள்: அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசு போக் குவரத்து கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங் களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 20 சதவீத ஊக்கத் தொகை வழங்கப்படும்.

இழப்பில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம்10 சதவீத ஊக்கத் தொகை வழங்கப்படும்.

‘சி’, ‘டி’ பிரிவு பணியாளர்கள்: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர்அகற்று வாரி யத்தில் பணிபுரியும் தகுதியு டைய ‘சி’, ‘டி’ பிரிவு பணியாளர் களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை என 10 சத வீத ஊக்கத் தொகை வழங்கப் படும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதி யுடைய ‘சி’, ‘டி’ பிரிவு பணியா ளர்களுக்கு 8.33 சதவீத ஊக்கத் தொகை வழங்கப்படும். தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3,000 கருணைத் தொகையாக வழங் கப்படும். இதனால், ஊக்கத் தொகை பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 முதல் அதிகபட்சம் ரூ.16,800 வரை ஊக்கத் தொகை பெறுவார்கள். மொத்தத்தில், தமிழ்நாடு அர சின் பொதுத்துறை நிறுவனங் களில் பணிபுரியும் 2 லட்சத்து83 ஆயிரத்து 787 தொழிலாளர் களுக்கு ரூ.402 கோடியே 97 லட்சம் ஊக்கத் தொகை மற்றும் கருணைத்தொகையாக வழங் கப்பட உள்ளது. கூட்டுறவு அமைப்பு, நிறுவனங்கள்: மேலும், பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங் களில் பணிபுரியும் பணியாளர் களுக்கான ஊக்கத் தொகை தொடர்பான உத்தரவுகள் தனியாக பிறப்பிக்கப்படும். தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் விழாக்காலங் களை மகிழ்ச்சியுடன் கொண் டாட வழிவகை செய்யும்.இவ் வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *