டிசம்பர்-2 சுயமரியாதை நாள் தாராபுரம் கழக மாவட்டத்தில் ‘விடுதலை’ சந்தா சேர்ப்புப்பணிகள் தீவிரம்

Viduthalai
1 Min Read

திராவிடர் கழகம்

தாராபுரம்,நவ.25- தாராபுரம் கழக மாவட்டம் கணியூர், காரத் தொழுவு, தாராபுரம், துங்காவி, உடுமலைப்பேட்டை பகுதிகளில் நேற்று (24.11.2023) காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை விடுதலை சந்தா சேர்ப்புப் பணியில் கழகப் பொறுப்பாளர்கள் ஈடுபட்டனர்.

90 வயதிலும் நாள்தோறும் இயங்குவதோடு நம்மையும் நம் இனத்தையும் நாளும் இயக்கி வழிநடத்தக்கூடிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்துள்ள இன வுரிமை மீட்பு ஏடான  “விடுதலை நாளிதழ்” சந்தாக்களை தமிழர் தலைவரின் 91ஆவது பிறந்த நாள் (டிசம்பர்-2 சுயமரியாதை நாள்) பரிசாக திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா ஜெயக் குமார் அவர்களிடம் கழகத் தோழர்கள் வழங்கி மகிழ்ந்தனர்.

தாராபுரம் மாவட்டத் தலைவர்  கணியூர் கிருஷ்ணன் 5 விடுதலை சந்தாக்களும், மாவட்ட செயலா ளர் வழக்குரைஞர் தம்பி பிரபா கரன் 3 விடுதலை சந்தாக்களும், மாவட்ட துணைத் தலைவர் அலங் கியம் புள்ளியான் 5 விடுதலை சந்தாக்களும், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தாராபுரம் முனிஸ்வரன் 3 விடுதலை சந்தாக் களும், தாராபுரம் நகர தலைவர் சின்னப்பதாஸ், நகர செயலாளர் முத்தரசு ஆகியோர் 6 விடுதலை சந்தாக்களும், உடுமலைப்பேட்டை நகர செயலாளர் துங்காவி வெங்க டாசலம் 1 விடுதலை சந்தாக்களும், தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாபுகண்ணன் (தி.மு.க) 2 விடுதலை சந்தாக்களும் வழங்கி மகிழ்ந் தார்கள். 

மேலும் விடுதலை சந்தாக்களை திரட்டி டிசம்பர் 2 சென்னையில் தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்குவதாக உறுதி அளித்தனர்.

பொதுக்குழு உறுப்பினர் வழக் குரைஞர் சக்திவேல், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் தங்கவேல், மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப் பினர் கணியூர் மயில்சாமி, அலங்கியம் கோபால், தாராபுரம் பரத், மாவட்ட ப.க செயலாளர் தாராபுரம் முருகேசன் மாவட்ட ப.க தலைவர் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *