2018 ஆம் ஆண்டிலிருந்து வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் மரணம்!

viduthalai
1 Min Read

மக்களவையில் ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடில்லி, டிச.8 2018 ஆம் ஆண்டிலிருந்து வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் மரண மடைந்துள்ளதாக மக்களவையில் ஒன்றிய அமைச்சர் வி. முரளீதரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து வருகின் றனர். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய போதுதான், இந்திய மாணவர்கள் இவ்வளவு எண்ணிக்கையில் படித்து வருகிறார்கள் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் வெளிநாடுகளில் படித்து வரும் மாணவர்களில் எத்தனை பேர் மரணம் அடைந் துள்ளனர் என்ற தகவலை ஒன்றிய அமைச்சர் வி. முரளீதரன் மக்களவையில் தெரிவித்தார்.

அப்போது, “408 இந்திய மாணவர்கள் கடந்த 2018 இல் இருந்து மரணம் அடைந்துள்ளனர். கனடாவில் அதிகபட்சமாக 91 பேர் மரணம் அடைந்துள்ளனர். பிரிட்டனில் 48 பேரும், ரஷ் யாவில் 40 பேரும், அமெரிக்காவில் 36 பேரும், ஆஸ்திரேலியாவில் 35 பேரும், உக்ரைனில் 21 பேரும், ஜெர்மனியில் 20 பேரும், சைபிரஸில் 14 பேரும், இத்தாலி மற்றும் பிலிப்பைன்ஸில் தலா 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாண வர்களின் பாதுகாப்பு ஒன்றிய அரசின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்று என முரளீதரன் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *