கல்லக்குடியில் ஏ.டி.எம். மய்யம் திறப்பு

1 Min Read

அரியலூர், டிச. 7- அரியலூர் மாவட்டம் கல்லக்குடியில் (டால்மியாபுரம்) திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் மீன்சுருட்டி திலீபனின் இந்தியா ஒன் ஏ.டி.எம் நிலையத்தை 5-12-2023 அன்று நண்பகல் 12 மணி அளவில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
நிகழ்விற்கு அரியலூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையேற்றார்.

திராவிடர் கழக காப்பாளர் மணிவண்ணன், மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட இணை செயலா ளர் இரத்தின.ராமச்சந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர் பொன்.செந்தில்குமார், மாவட்ட விவசாய அணி தலைவர் செந்துறை சங்கர், அரியலூர் ஒன்றிய தலைவர் சிவக்கொழுந்து, ஜெயங்கொண்டம் இளைஞரணி தலைவர் பெரியார் செல்வன் ஆகியோர்முன்னிலையேற்றனர்.

மாவட்டத் துணைத் தலைவர் மீன்சுருட்டி திலீபன் அனை வரையும் வரவேற்றார் இடத்தின் உரிமையாளர் மற்றும் நண்பர்கள் நிறுவன ஊழியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *