மூளைச் சாவு -உடல் உறுப்புகளை கொடையாக அளித்த மேற்குவங்க பெண்ணுக்கு அரசு மரியாதை

Viduthalai
0 Min Read

அரசியல்

சென்னை, அக்.27  மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த, ஹேமந்த்குமார் கேஷ் மனைவி அசிணாகோஷ், 50. உடல் நல பாதிப்பால் எழும்பூர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், 24.10.2023 அன்று இரவு திடீரென மூளைச்சாவு அடைந்தார்.

குடும்பத்தினர் விருப்பத்தின்படி அவரது கண்விழி, இரண்டு சிறுநீரகம், இதயம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள், மருத்துவமனைக்கு கொடையாக  அளிக்கப்பட்டன. இதையடுத்து, தமிழ்நாடு அரசு ஆணைப்படி, அசிணா கோஷ் உடலுக்கு,  அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *