செய்திச் சுருக்கம்

1 Min Read

கட்டாயம்

‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி’ திட்டத்தில் பயனாளிகளுக்கு 13ஆவது தவணை தொகை விடுவிப்புக்கு வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு அவசியம் என மேலாண்மை – உழவர் நலத்துறை அறிவிப்பு.

உத்தரவு

கோவில்கள் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளின் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள கோவில் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறநிலையத் துறை ஆணையருக்கு அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன்  அனுமதி வழங்கி உத்தரவு.

தேர்வு

என்.அய்.டி., அய்.அய்.அய்.அய்.டி., சி.எப்.டி.அய்., போன்ற கல்வி நிறுவனங்களில் படிப்புகளில் சேர மாணவர்கள் குறைந்த பட்சம் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை தகவல்.

அறிவிப்பு

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இ.திருமகன் ஈவெரா மரணமடைந்ததையொட்டி, ஈரோடு கிழக்குத் தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *