ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்து: மாநிலங்கள் விஷ வித்தாம்!

1 Min Read

ஒன்றியம் என்று சொல்வதற்கு சிலர் சர்ச்சையைக் கிளப்பி வருகிறார்களே, ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கோல்வால்கர் எழுதிய ‘ஞானகங்கை’யில் இருப்பதை அப்படியே இங்கே தருகிறோம்.

”இன்று நமக்குள்ள அரசியல் சாஸனத்தை உருவாக்கியவர்கள் நமது ராஷ்ட்ரமானது உடலைப் போன்று பிரிக்கப்பட முடியாத ஓருறுப்பு தேசியம் வாய்ந்தது என்ற உறுதியான நம்பிக்கையில் ஆழ்ந்து ஊன்றியவர்கள் அல்லவென்பது நமது அரசியல் சாஸனத்தை சமஷ்டி அமைப்பாக நிறுவியதிலிருந்து புலனாகிறது; நமது நாடானது பல ராஜ்யங்களின் ஒன்றியம் (யூனியன்) என்று இன்று வர்ணிக்கப்படுகின்றது. இதற்கு முந்திய அமைப்பில் வெறும் மாகாணமாக இருந்தவையெல்லாம், மாநிலங்க ளென்ற கவுரவ அந்தஸ்துடன், எத்தனையோ தனி அதிகாரங்களுடன் விளங்குகின்றன. முற்காலத்தில் நமது ஒருமித்த ஒரே தேசிய வாழ்க்கையை, தனியுரிமை பெற்ற பல அரசியல் அமைப்புகளாகத் துண்டாடியபோது தேசியஒருமைப்பாடு சிதைந்தழிந்ததற்கும், தோல்வியடைந் ததற்கும் விதைகள் விதைக்கப்பட்டன. இன்றுள்ள சமஷ்டி அமைப்பும் அதே பிரிவினை விதைகளை விதைத்துள்ளது.”

மேலே கண்ட கூற்று, அவரது மொழி பெயர்ப்பான ‘ஞானகங்கை’ (Bunch of Thoughts-  ஆங்கில நூல் தலைப்பு) நூலின் 326 ஆம் பக்கத்தில் உள்ளவை இவை.

இதிலே ஒன்றியம் (Union) என்று கூறியிருக்கிறார்.

குதர்க்கமாகப் பேசிவரும் தமிழ்நாடு ஆளுநருக்கு இது தெரியாதோ!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *