பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி கலந்துரையாடல்

2 Min Read

திராவிடர் கழகம்

சேலம், ஜன. 13- சேலம் மற் றும் மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் பகுத்தறிவு ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட் டம் 08.01.2023 அன்று காலை 11 மணியளவில் சேலம் அம்மாபேட்டை யில் நடைபெற்றது. 

இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு வீரமணி ராஜு (தலைவர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) சேலம் தலைமை தாங்கி னார். மேட்டூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் பு.வீர மணி வரவேற்பு உரை ஆற்றினார். மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோவி அன்புமதி மற்றும் மேட்டூர் மாவட்ட பகுத்தறிவா ளர் கழக செயலாளர் சி.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேலம் மண்டல தலைவர் சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியம், மாநில பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் தமிழ் பிரபாகரன் சேலம் மாவட்ட கழக காப்பா ளர் கி.ஜவகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மேட்டூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி செயலாளர் வேல்முரு கன் நன்றி உரையாற்றினார்.

கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம்-1: மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் மேட்டூர் அ. சந்திரசேகர் மறைவிற்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கி றது.

தீர்மானம் 2: சேலம் மற்றும் மேட்டூர் மாவட் டத்தில் பகுத்தறிவாளர் கழகம் பகுத்தறிவு ஆசிரி யரணிக்கு அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க் கலாம் என கலந்துரை யாடல் கூட்டம் மூலமாக தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3: சேலம் மற்றும் மேட்டூர் மாவட் டத்தில் பெரியார் பயிற்சி வகுப்பு சிறப்பாக நடத்து வது என்றும் அதிக அள வில் தோழர்களை பங் கேற்க செய்வது என்றும் இக்கூட்டத்தின் மூலமாக தீர்மானிக்கப்படுகி றது.

இக்கூட்டத்தில் வாசந்தி வீரமணி ராஜு அம்மையார் மற்றும் மேட்டூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கா.நா பாலு, கோ.தங்கராஜ், சேலம் மாநகர கழக செயலாளர் இராவண பூபதி, வழக்குரைஞர் ஆர்.செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் ஆ.சுரேஷ், சத்தியமூர்த்தி வீரன், சேலம் மண்டல இளைஞரணி தலைவர் பா. வேல்முருகன் ஆர். எம் சண்முகசுந்தரம், ஆர். வீரமணி, குணசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *