பொங்கல் வாழ்த்து – கி.வீரமணி

0 Min Read

ஞாயிறு மலர்

அன்புடையீர்! வணக்கம்.

இன்பம் பயக்கும் இயற்கை வளமெலாம்

விஞ்சித் தோன்ற எய்திடும் தையில்

பல்சுவை பல்கி பாலுடன் பொங்க

பொங்குக வாழ்க்கை! பொங்குக செல்வம்!!

அடிமை யொழிய ஆண்மை பொங்குக!

கற்பனைக் கடவுளுங் கெடுசூழ் சமயமும்

அடியோ டழிய அறிவு பொங்குக!

நன்னிலப் பற்றுந் தாய்மொழிப் பற்றும்

தன்னுணர் வோடு தழைக்கப் பெற்று

வாழிய நெடிது வளம்பல மல்கியே!

– கி.வீரமணி, செல்வம் நிலையம், கடலூர் முதுநகர்

குறிப்பு: 1952இல் தோழர்களுக்கு அனுப்பிய பொங்கல் வாழ்த்து! உதவி நெல்லிக்குப்பம் மு.சுப்பிரமணியம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *