புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் முத்துக்கள்
பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல் நன்னாள்,
போற்றி விழாக் கொண்டாடி உன்ந லத்தைச்
செத்தவரை மறந்தாலும் மறவா வண்ணம்
செந்தமிழால் வானிலெல்லாம் செதுக்கி வைத்தோம்!
பத்தரைமாற் றுத்தங்கம் ஒளிமாய்ந் தாலும்
பற்றுளத்தில் உன்பழஞ்சீர் மங்கிற்றில்லை.
“தேரிழுப்பும் செம்பெடுப்பும்
அல்ல விழா!
அன்னவெல்லாம்
ஓரிழுப்பு நோய் பொதுவின் உள்விழைவே விழா!
ஏரெழப்பும் புத்தம், புதுச் செல்வம் இட்டபால்
பாரழைக்கப் பொங்கல் பயன் மணக்க வைத்தனரே!
அய்ந்தாம் படைஅழிக!
அமிழ்தென்று தைப் பொங்கலை உண்டோம் இந்நாளே!
தமிழென்று போர் தொடுப்போம் தாவி! நம்மை நலிப்பார்
உள்ள பகைவரல்லர்; உட்பகையே ஆம் என்றே
உள்ளுக வாழ்க உயர்ந்து.