பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் துறையில் பயிலும் கே.விக்னேஷ் கண்ணா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதை பாராட்டி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரால் வெற்றித் தமிழர் விருது 10.01.2023 அன்று வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் செ.வேலுசாமி மற்றும் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பூ.கு.சிறீவித்யா ஆகியோர் விருது பெற்ற மாணவரை பாராட்டினர்.