இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் வைகோ கண்டனம்

Viduthalai
0 Min Read

அரசியல்

சென்னை,அக்.29 – ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ விடுத் துள்ள அறிக்கை வருமாறு,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் சென்னை, தியாகராயர் நகரில் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது காலிகள் சிலர் கற்களையும், பாட்டில்களையும் வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றார்கள்.

இதில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. இதனுடைய பின்னணியை சரியாக விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றி, தண்டிக்க வேண்டும்.

இந்தச் சம்பவத்திற்குக் காரண மானவர்களுக்கு கடும் கண்டனத்தை மறுமலர்ச்சி திமுக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

-இவ்வாறு வைகோ குறிப் பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *