கருத்தரங்கம் தெருமுனைக்கூட்டங்கள் நடத்திட அரியலூர் இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு

2 Min Read

அரசியல்

ஜெயங்கொண்டம், அக். 30- அரி யலூர் மாவட்ட திரா விடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட் டம் 29.10.2023 ஞாயிறு காலை11 மணியளவில் செங்குந்தபுரம் பிரபா வாட்டர் சர்வீஸ் வளா கத்தில் நடைபெற்றது. 

மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்தி ரையன் தலைமையில், தலைமைக் கழக அமைப் பாளர் க.சிந்தனைச் செல் வன் ,மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாநில இளைஞரணி அமைப்பாளர் வழக்கு ரைஞர் ஆ. பிரபாகரன், மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், காப்பாளர் சு.மணிவண் ணன், ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றக் கூட்டத்தில் மாவட்ட இ. அ.தலைவர் க.கார்த்திக் கடவுள்மறுப்பு கூறினார்.மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சு.அறிவன் வரவேற்றார்.

இளைஞரணி வளர்ச் சிப்பணிகள் குறித்தும், இயக்கத்தின் பல்வேறு செயல் திட்டங்கள் குறித் தும் விவாதிக்கப்பட்டது. தமிழர் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு இளை ஞரணி செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் விளக்கப்பட்டது. மாவட்ட இ.அ.அமைப்பாளர் க. செந்தில் தீர்மானங்களை வாசித்தார்.

திருச்சியில் நடை பெற்ற திராவிடர் கழக தலைமை செயற்குழுவின் தீர்மானங்களை செயல் படுத்துவது எனவும், குலத்தொழில் கல்வியை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசின் “மனுதர்ம யோஜனா” திட்டத்தை எதிர்த்து அரியலூர் மாவட்டத்தில் தெரு முனை கூட்டங்களை நடத்திடவும் 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கம் நடத்திடவும்,

பெரியார் தகவல் பல கைகளை திறந்திடவும் முடிவு செய்யப்படுகிறது.

ஜெயங்கொண்டம் முதல் ஆண்டிமடம் வரையிலான சாலை விரி வாக்க பணிகளை பொது மக்கள் நலன்கருதி விரைந்து முடித்திட வேண்டுமாய் இந்த கலந் துரையாடல் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

கூட்டத்தில் மாவட்ட வழக்குரைஞரணி அமைப் பாளர் மு. ராஜா, மாவட் டத் துணைச் செயலா ளர்கள் பொன்.செந்தில் குமார்,  மா.சங்கர், மாவட்ட துணைத் தலைவர் ரத்தின. இராமச்சந்திரன், ஒன்றிய தலைவர் மா. கருணாநிதி, செந்துறை ஒன்றிய தலைவர் மு. முத்தமிழ் செல்வன், தா.பழூர் ஒன்றிய அமைப் பாளர் சி. தமிழ் சேகரன், வீராக்கன் சந்திரன், ஆண் டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், ஒன்றிய செயலாளர் தியாக. முருகன், ப.சுந்தரமூர்த்தி குழுமூர் த.சுப்பராயன், அரியலூர் ஒன்றிய இ.அ. தலைவர் க.மணிகண்டன், செயலாளர் கி. கமலக் கண்ணன், பெரியார் பெருந்தொண்டர் ப.முத் துக்குமரன் உள்ளிட்ட  பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *