மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது இங்கிலாந்து வழங்குகிறது

2 Min Read
மற்றவை

லண்டன், பிப். 1- இங்கிலாந் தில் மன்மோகன் சிங் குக்கு வாழ்நாள் சாதனை யாளர் விருது வழங்கப் படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது  இங்கிலாந் தில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய இந்திய மாணவர் கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தகத்துறை ஆகி யவை இணைந்து இந் தியா-இங்கிலாந்து சாத னையாளர்களுக்கு விரு துகளை வழங்கி வருகிறது. 

இங்கிலாந்து பல் கலைக்கழகங்களில் படித்த இந்திய மாணவர் களின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப் படுகின்றன. அதோடு இருநாடுகளிலும் கல்வி, அரசியல், பொருளாதா ரம் போன்ற பல துறைக ளில் சிறப்பான பங்களிப்பு செய்வோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குக்கு வாழ்நாள் சாதனை யாளர் விருது அறிவிக்கப் பட்டுள்ளது. பொருளா தாரம் மற்றும் அரசியல் வாழ்வில் ஆற்றிய பங்க ளிப்பிற்காக மன்மோகன் சிங்குக்கு இந்த உயரிய விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அறிவிக்கப்பட்ட இந்த விருது, தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங் கத்தால் விரைவில் டில்லி யில் மன்மோகன் சிங்கி டம் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக் கையில், “நமது நாட்டின் எதிர்காலம் மற்றும் நமது இரு நாடுகளுக்கு இடை யேயான உறவுகளின் கீழ் இளைஞர்களிடம் இருந்து வரும் அர்த்த முள்ள இந்த விருதை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 

இந்தியா-இங்கிலாந்து உறவு உண்மையில் நமது கல்விக் கூட்டாண்மை மூலம் வரையறுக்கப்படுகி றது. நமது தேசத்தை நிறு விய மகாத்மா காந்தி, ஜவ ஹர்லால் நேரு, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், சர் தார் படேல் மற்றும் பலர் இங்கிலாந்தில் படித்து, சிறந்த தலைவர்களாக மாறினர். பல ஆண்டு களாக எண்ணற்ற இந் திய மாணவர்கள் இங்கி லாந்தில் படிக்கும் வாய்ப் பைப் பெற்றுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *