“பெரியார் 1000” பரிசளிப்பு விழா

Viduthalai
0 Min Read

தமிழ்நாடு, திராவிடர் கழகம்
கரூர் மாவட்டம் தம்ம நாயக்கம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா-விடை தேர்வில் பங்குபெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும்,  அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டன. பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களுக்கு பெரியார் படம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் குமாரசாமி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். கரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் பொம்மன் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். பள்ளியின் ஆசிரியர், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *