விரைவுப் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நவம்பர் 19இல் எழுத்துத் தேர்வு

Viduthalai
1 Min Read

சென்னை, அக். 30- தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துநர் பணியிடங் களுக்கு நவம்பர் 19ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற இருப் பதாக அறிவிப்பு வெளியாகி இருக் கிறது.

தமிழ்நாட்டில் அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் ஓட்டு நர், நடத்துநர் பணியிடங்கள் காலி யாக இருப்பதாக அறிவிப்பு வெளி யாகி இருக்கிறது. இந்த காலியிடங்கள் எழுத்துத் தேர்வு மூல மாக நிரப்பப்பட இருக்கிறது. அது குறித்த அறிவிப்பை அரசு விரைவு போக்குவரத்துகழகம் வெளியிட் டுள்ளது.

அதில் அரசு விரைவுப் போக்குவரத்துகழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பட இருக்கிறது.

இந்த பணிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 10 மய்யங்க ளில் நவம்பர் 19ஆம் தேதி முதல் எழுத்து தேர்வு நடைபெற இருக்கிறது.

இந்த தேர்வுக்கான சீட்டை நவம்பர் 13 ஆம் தேதி இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள் ளலாம்.

மேலும் வேலைவாய்ப்பு அலுவ லகம் மூலம் விண்ணப்பித்தவர் களுக்கு தேர்வுக்கானஅனுமதி சீட்டு அரசு விரைவுப் போக்கு வரத்து கழகம் மூலம் அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *