பேசும் பேனா!

Viduthalai
1 Min Read
ஞாயிறு மலர்

கதைகள் தீட்டிய

பேனா

கவிதைகள் புனைந்த

பேனா

காலத்தால் அழியாத

கருத்துநிறை 

கதை வசனம் எழுதி

அழியாப் புகழ் பெற்ற

பேனா

ஆயிரமாய் உடன்பிறப்பு

கடிதம் எழுதி

ஆனந்தமாய் தொண்டர்

உள்ளம் தினம் மகிழ

உழைத்திட்ட கலைஞர்

பேனா

குறளோவியம் எழுதி

குற்றம் பல சுட்டிக் காட்டி

குறையாத வளமிக்க

பேனா

காலத்தால் அழியாத

கலை வடிவங்கள்

நினைவுச் சின்னங்கள்

அமைத்திட எழுதிய

பேனா

ஏழைகள் வாழ்க்கை

ஏற்றம் பெற 

நலத்திட்டங்கள் பலவும்

நடைமுறைப் படுத்த

எண்ணங்கள் எழுதிட்ட

பேனா

உண்மை பல சொன்ன

பேனா

உள்ளம் கவர் தலைவர்

பேனா

ஆட்சி பல கண்ட

பேனா

ஆற்றல் மிக்க எழுத்தால்

அழியாத இடம் பெற்ற

கலைஞர் பேனா! 

இதில் அட்டி என்ன? 

வெட்டி உளறல்  என்ன? 

தமிழ்நாடு தமிழ் மக்கள்

தமிழ் மொழி உயர்ந்திட

இறுதி வரை உழைத்த

முத்தமிழறிஞருக்கு

அமைப்போம் பேனா

நினைவுச்சின்னம்!! 

தொடரட்டும் திராவிட

மாடல் நல்லாட்சி!!! 

– ச.மணிவண்ணன், துறையூர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *