பொறியியல் சார்நிலை பதவிகள் 1083 காலி இடங்கள் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

Viduthalai
1 Min Read

சென்னை, பிப்.5 1,083 பணியிடங் களுக்கான புதிய அறிவிப்பை டிஎன் பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி இணையதளம் வாயிலாக விண்ணப் பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நிரப் பப்பட்டு வருகிறது. 2023-ஆம் ஆண்டில் நடத்தப்பட உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் குறித்த பட்டியல் கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டது.

 நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளில் இருக்கும் பணி மேற்பார்வையாளர் இளநிலை வரை தொழில் அலுவலர் உள்ளிட்ட 1083 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு களுக்கு இன்று (5.2.2023) முதல் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. மேலும், 04.03.2023 தேதி இந்த தேர்வுகளுக்காக விண்ணப்பிப்ப தற்கான கடைசி நாளாகும். இணைய வழி விண்ணப்பங்களை திருத்தம் செய்வ தற்கான அவகாசம் 09.03.2023 முதல் 11.09.2023 வரை வழங்கப்பட்டுள்ளது இந்த காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு ஆகியவை காலை மற்றும் மதியம் என 27.05.2023-ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *