‘தி.மு.க. அரசே தமிழ்நாட்டை வழி வழி ஆள்க’ என வாழ்த்தியவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Viduthalai
1 Min Read

சென்னை,பிப்.7- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ள தாவது,

தனித்தமிழ் இயக்கத்துக்கும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டத்துக்கும் தன் வாழ்நாளெல்லாம் உழைத்தவர் திரவிட மொழி நூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள்.

தி.மு.க. அரசின் தமிழ் காக்கும் பணிகளை மெச்சி, ‘தி.மு.க. அரசே தமிழ்நாட்டை வழி வழி ஆள்க’ என வாழ்த்தி, தமிழின் உண்மையான இயல்பையும் வரலாற்றையும் அறிந்து – தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிப்படுத்துதல் வேண்டும் என நம் பணிகளுக்கு வழி காட்டிய தமிழுணர்வாளர்!

தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, தமிழர் மதம், தமிழர் திருமணம், திருக்குறள் உரை எனத் தமிழின் தனிச் சிறப்பை நிறுவ தனி மனிதப் பல்கலைக் கழகமாக அவர் ஆற்றிய அளப்பரிய தொண்டை அவரது பிறந்தநாளில் நன்றியோடு நினைவுகூர்கிறேன்!

-இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *