இன்றைய வக்கீல் முறையே மனித சமூகத்தின் ஒழுக்கத்திற்கும், நாணயத்திற்கும், சாந்திக்கும், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் நேர் விரோதமானதாகும். அது மாத்திரமல்லாமல், தேசத்தின் ஒழுக்கமும், நாணயமும், சுயமரியாதையும், கெட்டுப் போனதற்கு வக்கீல்களே காரணஸ்தர்கள் என்று சொல்லுவது சிறிதும் மிகைப்படக் கூறுவதாகாது.
‘குடிஅரசு’ 10.8.1931