உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கல்

1 Min Read

சென்னை, பிப்.19- ஏழை-எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ – மாணவிகள் உயர்கல்வி பயிலுவதற்கான கல்வி உதவித் தொகைகள் ஈரோட்டில் சக்தி மசாலா நிறுவனங்களின் தன்னார்வ அமைப்பான – சக்தி தேவி அறக்கட்டளையின் 23ஆம் அய்ம்பெரும் விழாவில் வழங்கப்பட்டன. சிறந்த தொழில் முனைவோர்களான இந்நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் சாந்தி துரைசாமி, தலைவர் முனைவர் பி.சி.துரைசாமி, பண்ணாரி அம்மன் நிறுவன குழுமத் தலைவர் எஸ்.வி.பால சுப்ரமணியம், வாசவி மருத்துவமனையின் கவுரவ செயலர் சிறீராமுலு, அரிமா என்.முத்துசாமி, டாக்டர் எல்.எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்று ஒரு கோடியே 24 லட் சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உயர்கல்வி உதவித் தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இவ்விழாவில் பொது வாழ்வில் சிறப்பாகப் பணி புரிந்தமைக்காக இந்திய புலனாய்வுத் துறை மேனாள் இயக்குநர் டாக்டர் டி.ஆர்.கார்த்திகேயனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *