பெரியார் 1000 வினா-விடை தேர்வு பரிசளிப்பு

1 Min Read

மற்றவை

அமைந்தகரை, பிப். 20- பெரியார் -1000 வினா- விடை தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா சென்னை அமைந்தகரை செனாய் நகரில் உள்ள பெண்கள் பள்ளியில் 17-.2.-2023 வெள்ளிக்கிழமை மதியம் 2.-00 மணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சின்னவெள்ளத்தாய் அவர்களின் ஒருங்கிணைப்பில் உதவி தலைமை ஆசிரியர் ரங்கநாதன் தலைமையில் தமிழாசிரி யர் ராவணன் வரவேற்பு ரையுடன் துவங்கியது.

நிகழ்வில் பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வெங்கடேசன்,  தென் சென்னை பகுத்தறிவாளர் கழக தலைவர் மு. இரா.மாணிக்கம்,  அயன்புரம் துரைராஜ் ஆகியோர் மாணவிகளிடம் பெரியாரின் தன்னலமற்ற சேவையினை எடுத்துரைத்தனர்.பின் பரிசு பெற்ற மாணவிகளுக்கு பதக்கமும் புத்தகமும் பரிசுத்தொகையும் அளித்து மகிழ்ந்தனர்.

நிகழ்வில்‌ ஆவடி மாவட்ட துணை செய லாளர் பூவை க.தமிழ்ச் செல்வன் ஆசிரியர்கள் பானுமதி, மெர்லி, பிரேமா, விமலா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *