பிஜேபி ஆளும் மணிப்பூரில் காவல்துறை அதிகாரி சுட்டுக்கொலை

Viduthalai
2 Min Read

இம்பால், நவ. 1- மணிப்பூரில் கடந்த மே 3-ஆம் தேதி மெய்தி சமூகம் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற் பட்டது. இது பல இடங் களில் பரவி கலவரம் வெடித்தது. வீடுகள், பள் ளிகள் உள்ளிட்ட பல் வேறு கட்டடங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட் டன. இந்த சம்பவத்தில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து, கலவரம் பரவி விடாமல் தடுக்கும் நோக்கில் காவல் துறையினர் பல்வேறு நகரங்களில் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதற் காக மோரே நகரிலும் காவல்துறையினர் அதிக அளவில் பணியில் ஈடு பட்டு வருகின்றனர். இந் நிலையில், மணிப்பூரின் தெங்நவ்பால் மாவட்டத் தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இன்று காலை மூத்த காவல் அதிகாரி சிங்தம் ஆனந்த் என்ற காவல் அதிகாரி சுட்டு கொல்லப்பட்டார். அவர் இம்பால் நகரில் இருந்து 115 கி.மீ. தொலை வில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஹெலிபேட் கட்டு மானப் பணியை மேற்பார் வையிடும் பணியில் ஈடு பட்டபோது இந்த நிகழ்வு நடந்துள்ளது. 

இதன் எதிரொலியாக காவல் துறை கமாண்டோ படை நிகழ்விடத்துக்கு சென்றது. எனினும், அவர் கள் செல்லும் வழியில் ஊடுருவல் கும்பலால் கடு மையாக தாக்கப்பட்ட னர். இதில், பலர் காய மடைந்தனர். இதனைத் தொடர்ந்து, அசாம் ரைபிள் படையினர் அந்த பகுதிக்கு பாதுகாப் புப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர் கள் தாக்குதலில் சிக்கிய காவல்துறை கமாண்டோ படையினரை மீட்டனர். அவர்களில் பலர் சிகிச் சைக்கு கொண்டு செல் லப்பட்டனர்.

இதுபற்றி குகி சமூக குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், மோரே நக ரில் மக்களை துன்புறுத்து வதற்காக மணிப்பூர் அரசு படைகளை அனுப்பி வருகிறது. படைகளின் இந்த தவறான பயன் பாட்டால், குகி கிராம தன்னார்வலர்கள் இணைந்து பதிலடியாக துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர் என தெரிவித்து உள்ளது. காவல் துறையினர் திரும்பப் பெறப்பட வேண்டும் என ஒன்றிய அரசுக்கும் வேண்டுகோள் விடப் பட்டு உள்ளது. எனினும், நிலைமையை பற்றி முத லில் ஆய்வு செய்த பின் னரே, ஒரு முடிவுக்கு வர முடியும். எந்த குழுவும் எதுவும் கூற முடியும். அத னால், அது உண்மையாக இருக்க வேண்டிய அவ சியமில்லை என காவல் அதிகாரி ஒருவர் கூறி யுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *