ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 23.2.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ஆர்.எஸ்.எஸ் – பாஜக ஆதிக்கத்தை அப்புறப்படுத்த வேண்டும், ராகுல் பேச்சு.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* அக்கப்போர் செய்வதை விடுத்து ஆளுநர் தனக்கான வேலையை எப்போது செய்யப்போகிறார்? அமைச்சர் க.பொன்முடி கண்டன அறிக்கை.

* மார்க்ஸ் குறித்து சர்ச்சை கருத்து ஆளுநர் மாளிகை முன் 28இல் கருப்புக்கொடி போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

தி டெலிகிராப்:

* அதானி பங்குச் சரிவு: ஆஸ்திரேலிய ஓய்வூதிய சேமிப்புகளில் பத்து மில்லியன்கள் ஆபத்தில் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

* ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மேனாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்த விமர்சனத்துக்கு பதில் அளித்துள்ள ஜவஹர் சர்கார், 2002 குஜராத் கலவரம் குறித்து “எஸ். ஜெய்சங்கரின் தந்தை கே.சுப்ரமணியம் கூறு கையில், ‘தர்மம் குஜராத்தில் (2002 கலவரம்) கொல்லப் பட்டது. அப்பாவி மக்களைப் பாதுகாக்கத் தவறியவர்கள் அதர்மக் குற்றவாளிகள். ராமர்… குஜராத்தின் அசுரர் ஆட்சி யாளர்களுக்கு எதிராக தனது வில்லைப் பயன்படுத்தி யிருப்பார்” என்று 2002 ஆம் ஆண்டின் கட்டுரையை மேற்கோள் காட்டி ட்வீட் செய்துள்ளார்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *