பாலசுதீன மக்களும் – இசுரேலின் அரச பயங்கரவாதமும் – கருத்தரங்கம்

1 Min Read

சென்னை, நவ.2- உலக நாடுகளால் கைவிடப்பட்ட பாலசுதீன மக்களும் இசுரேலின் அரச பயங்கரவாதமும் என்ற கருத்தரங்கு 21.10.2023 சனிக்கிழமை மாலை 6:00 மணி அளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள மணியம்மை அரங்கில் நடைபெற்றது.

பகுத்தறிவாளர் கழகம் நடத்திய கருத்தரங்கில் எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழகத்தின் தென்சென்னை மாவட்ட தலைவர் மு.இரா.மாணிக்கம் வரவேற்புரை ஆற்றினார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநில செயலாளர் செல்வ. மீனாட்சி சுந்தரம் தலைமையேற்று உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் நன்றியுரை ஆற்றினார். செல்வ.மீனாட்சி சுந்தரம் அவர்கள் தமது தலைமை உரையில் பாலசுதீனத்தில் நடைபெறும் கொடுமைகள் பற்றி எடுத்துரைத்தார். கருத்துரை வழங்கினார் எழுத்தாளர் விஜயபாஸ்கர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *