ரூ.91 கோடியில் சென்னையில் 362 சாலைகள் சீரமைப்பு

1 Min Read

அரசியல்

சென்னை, பிப்.27 சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.91 கோடியில் 930 சாலைகளை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்கட்டமாக 362 சாலைகளை சீரமைக்கும் பணிகள் இன்று (27.2.2023) தொடங்குகிறது.

சென்னை மாநகராட்சி பகுதியில்கடந்த ஆண்டு போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதன்காரணமாக ஏராளமான சாலைகள் பழுதாயின. மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்ற பகுதிகளில் சாலைகளை சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வில் ரூ.1171 கோடியில்1860 கி.மீ. நீள சாலைகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குஅரசும் நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ரூ.91 கோடியில் 930 சாலைகளை சீரமைக்க திட்டமிட்டுள்ளது.

சிங்காரசென்னை 2.0 திட்ட நிதியில் ரூ.41கோடியே 65 லட்சத்தில், 362 சாலைகளை 62 கிமீ நீளத்துக்கு அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, தகுதி யான ஒப்பந்ததாரரை இறுதிசெய்து, பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் இன்று (பிப்.27) தொடங்குகிறது.

இது மட்டுமல்லாது பல்வேறு நிதி ஆதாரங்களின்கீழ் ரூ.50 கோடியில், 100 கிமீ நீளத்தில் 568 சாலைகளை சீரமைப்பதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர்கள் இறுதி செய்யப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்க இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *