ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு: தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் முன்னிலை!

1 Min Read

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு கடந்த 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்று, இன்று (2.3.2023) காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்  முன்னணியில் இருந்தார்.

பகல் 2 மணி நிலவரப்படி…

பகல் 2 மணி நிலவரப்படி வாக்குகள் எண்ணிக்கையின்படி ஈ.வெ.கி.ச.இளங்கோவன் –  61,682 வாக்குகளும்,

அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு – 22,556

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்  – 3,604

தே.மு.தி.மு.க.  வேட்பாளர் – 606 வாக்குகளும் பெற்றனர்.

அ.தி.மு.க. வேட்பாளரைவிட, ஏறத்தாழ 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் 

ஈ.வெ.கி.ச.இளங்கோவன் முன்னணியில் உள்ளார்.

வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் பேட்டி

ஈரோட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள், இந்த வெற்றியின் பெரும் பங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையே சாரும் என்று கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *