செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரியார் பயிற்சிப் பட்டறை

1 Min Read

அரசியல்

செங்கல்பட்டு, மார்ச் 2- செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல் கூட்டம் 26..2.2023 ஞாயிறு மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. 

மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சிவக்குமார் தலைமையில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்  மு.பிச்சைமுத்து வரவேற்றார்.

செங்கல்பட்டு மாவட்ட திரா விடர் கழக தலைவர் செங்கை சுந்தரம் செங்கல்பட்டு மாவட்ட கழக அமைப்பாளர் பொன். ராஜேந்திரன் கழக பொதுக்குழு உறுப்பினர் அ.பா. கருணாகரன்  மறைமலை நகர்  கழக தலைவர் திருக்குறள் வெங்கடேசன்  மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் செ.வினோத் ஆகியோர் முன்னிலையில் மாநில பகுத்தறி வாளர் கழக துணைத் தலைவர் கரிகாலன் இணையதளங்களில் மூடநம்பிக்கை, ஜாதி வெறி, மதவெறி கருத்துக்களுக்கு எதிராக தோழர்கள் உடனடியாக பதிவிட்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக் கலாம்  என்று கருத்துரை வழங்கினார்.

 மாநில பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஆ. வெங்கடேசன் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து கருத்துரை வழங்கினார் 

மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துவது மற்றும் பகுத்தறி வாளர்கள் கழகத்தின் பணிகள் குறித்தும் சிறப்புரை ஆற்றினார் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் சே.சகாயராஜ் மாநில தலைவருக்கு பயனாடை அணி வித்து மரியாதை செலுத்தி நன்றி யுரை ஆற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *