பத்மநாபபுரம், செப். 12- தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து கிராமங்களுக்கும் தந்தை பெரியாருடைய நூல்களை கொண்டு சேர்க்கும் முயற்சியில் குமரி மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் மற்றும் தோழர் கள் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன், பத்மநாபபுரம் நகர் மன்றத் தலைவர் அருள் சோபனுக்கு தந்தை பெரியாருடைய நூல்களை வழங்கினார்.அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் முக்கிய பிரமுகர்களுக்கும் தந்தை பெரியாருடைய பகுத்தறிவு அறிவியல் நூல்கள் வழங்கப்பட்டன. செப்டம்பர் மாதம் முழுவதும் பெரியாருடைய நூல்களை வழங்கி பெரியார் பிறந்த நாள் விழாவினை கொண்டாடி வருகின்றனர் குமரி மாவட்ட கழகத் தோழர்கள்.
