விருதுநகர் மாவட்ட வழக்குரைஞர் சங்கத்தின் மூத்த வழக்குரைஞர் அன்புக்குரிய திரு. வி.வைகுண்டம் அவர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் முதல், உடல்நிலை சரியில்லாததினால், மருத்துவமனையில் தொடர் சிகிச் சையில் இருந்து, பிறகு இல்லம் திரும்பினார். நேற்று (11.09.2026) காலை மதுரையில் உள்ள தேவகி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இரவு 7.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு பெரிதும் வருந்துகிறோம்.
தந்தை பெரியாரிடத்திலும், திராவிடர் இயக்கத்தின் பாலும் ஈர்ப்புள்ள மாமனிதர்! நம்மிடத்தில் அன்பு பாராட்டிய பெருமகனார். அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள், வழக்குரைஞர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், மறைந்தவருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
12.9.2026
சென்னை
குறிப்பு: கடந்த மாதம் அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்து வந்தார் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
இன்று (12.09.2026) காலை 10.30 மணிக்கு தெற்குரத வீதியில் உள்ள அவரது வீட்டில் இறுதி நிகழ்வு நடைபெறுகிறது.
