வட மாநில தொழிலாளர்கள் பிரச்சினை: பீகார் ஆய்வுக்குழு திருப்பூரில் ஆய்வு – அதிகாரிகள் முழு திருப்தி

Viduthalai
3 Min Read

அரசியல்

சென்னை, மார்ச் 6-   வட மாநில தொழி லாளர்கள் தொடர்பாக வதந்திகள் பரப்பப்பட்ட நிலை யில், தமிழ்நாடு அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக, திருப்பூரில் ஆய்வு செய்த பீகார் மாநில அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப் படுவதாக போலி காட்சிப் பதிவுகள் வெளியாகின. பல்வேறு வதந்தி களும் பரவின. இதன் காரணமாக, இங்கு பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் இடையே குழப் பம் ஏற்பட்டது. இந்தநிலையில், பெரும்பாலான தொழிலாளர்கள் ஹோலி நிகழ்வை கொண் டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம் பியதால் ரயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதியது.

 குறிப் பாக, திருப்பூரில் பீகார் மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட தால், இது தொடர்பாக அம்மாநில சட்டப் பேரவையில் எதிர்க் கட்சிகள் பிரச்சினையை கிளப்பின.

இதையடுத்து, இதுபற்றி ஆய்வு செய்ய தமிழ்நாட்டுக்கு அதிகாரிகள் குழு அனுப்பப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்தார். அதன்படி, பீகார் மாநிலத்தின் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை செயலர் பால முருகன் தலைமையில், நுண்ணறிவு பிரிவு அய்.ஜி. கண்ணன், தொழிலாளர் துறை ஆணையர் அலோக் குமார், சிறப்பு படை எஸ்.பி. சந்தோஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று திருப் பூர் வந்தனர். மாவட்ட ஆட்சியர் சு.வினீத், மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சஷாங் சாய் ஆகியோரை அவர்கள் சந்தித்து பேசினர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத் தினர், தொழில் துறையினர், தொழிற் சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்துரையாடினர். தொடர்ந்து, வட மாநிலத்தினர் பணியாற்றும் நிறுவனங் களுக்கு பிகார் குழுவினர் நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டு, அவர்க ளுக்கு பல்வேறு அறிவுரை களை வழங்கினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பிகார் மாநில குழு தலைவர் பாலமுரு கன் கூறியதாவது:

ஜோத்பூர் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் நடந்ததை திருப்பூரில் நடந்த நிகழ்வாக திரித்து, பல்வேறு சமூக வலைதளங் களில் பகிரப்பட்டதே இந்த குழப்பம், பதற்றத்துக்கு காரணம். இவை பொய்ச் செய்திகள், போலி காட்சிப் பதிவுகள் என தெரியவந் துள்ளது. மார்ச் 1ஆம் தேதிக்கு பிறகு மாவட்ட நிர்வாகம் எடுத்த தொடர் நடவடிக்கைகளால் திருப்பூர் இயல்பான நிலை யில் உள்ளது.

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் முழு திருப்தியை ஏற்படுத்தி உள்ளன. துரிதமாக செயல் பட்டு 4 நாள் களுக்குள் தொழி லாளர்களுக்கு தேவையான உதவி மய்யங்களை தொடங்கி, அவர்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத் தியது வரை அனைத்தும் திருப்தி கரமாக உள்ளது. அதற்காக நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் சஷாங் சாய் கூறும்போது, “சட்ட நிபுணர்க ளுடன் பேசி, சமூக வலைதளங்களில் போலி காட்சிப் பதிவு கள் பதிவேற்றம் செய்யப்படாமல் தடுக்க வும், காட்சிப் பதிவுகளை அழிக்க வும் நடவடிக்நகை எடுத்து வருகி றோம். 

சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கை முடக்கவும் திட்டமிட்டுள் ளோம். தனிப்படையினர் பிகார் செல்ல வும் தயாராக உள்ளனர். கட்டுப்பாட்டு மய்யத்துக்கு 600-க்கும் மேற்பட்ட அழைப் புகள் வந்துள்ளன.

பெரும்பாலும் பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து அழைப்பவர் களிடம், ‘வதந்திகளை நம்ப வேண்டாம்’  என தன்னார்வலர்கள் மூலம் விளக்கம் அளித்து வருகி றோம்” என்றார்.

பீகார் குழுவினர் பெருமாநல் லூரில் உள்ள பனியன் நிறுவனத் திலும் வட மாநில தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டனர். தாங் கள் மிகவும் பாதுகாப்புடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *