நான் யார்?

1 Min Read

அரசியல்

முதலில்; நான் மனிதன். இரண் டாவது: நான் அன்பழகன். மூன்றாவது; நான் சுயமரியாதைக்காரன். நான்காவது; நான் அண்ணாவின் தம்பி. அய்ந்தாவது; கலைஞரின் தோழன். இந்த உணர்வுகள் நான் சாகிற வரையில் என்னோடு இருக்கும். இயற்கையில் வரும் ‘சாக்காடு’ என் வரலாற்றை முடிக்கலாமே தவிர, இடையிலே என் வாழ்வில் புகுவ தற்கு எவனுக்கும் இடம் இருக்காது.

நான் இளைஞனாக, சிறுவனாக, விளக்கங்கள் இல்லாத நிலையில் தந்தை பெரியார் அவர்களிடத்திலே போய் நிற்கிற காலத்தில், என்னைப் பற்றி, ‘இவன் என்ன திடுதிப்பென்று முந்திக்கொண்டு எதையும் சொல்லுகிறான். 

கொஞ்சம் அவசரப்படுகிறான்; இன்னும் வளர வேண்டியவன்’ என்றுதான் சொன்னார்களே தவிர, ‘தடுமாறுகிறான்’ என்று சொல்லவில்லை.

அறிஞர் அண்ணா அவர்கள் என்னைப் பற்றி நண்பர்களிடம் சொன்னார். “அன்பழகனிடத்திலே தெளிவு இருக்கிறது. ஆனால் சொல்ல வேண்டாததை நண்பர் களிடத்திலே சொல்லிவிடுகிறான். அப்படிச் சொல்லி விடுகிற காரணத்தாலே சில பேர் வருத்தப்படுவார்கள் என்பது பற்றி அவனுக்குக் கவலை இல்லை.” 

ஆனால் அப்படிச் சொல்லக்கூடியவன் என்று அண்ணாவின் மனதிலே இடம் பெற்றவன் நான்.

– இனமானப் பேராசிரியர் அன்பழகன் 

நினைவு நாள் இன்று (7.3.2023)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *