ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட குட்டி பெருவெடிப்பு நிகழ்வு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சுவிட்சர்லாந்தின் CERN ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் அணுக்கருக்களைக் மோதவைத்து நுண்ணிய பெருவெடிப்பு நிகழ்வை மீட்டுருவாக்கம் செய்துள்ளனர். இதன் மூலம் பிரபஞ்சத்தின் தொடக்ககால பருப்பொருட்களின் தன்மையை ஆய்வு செய்வதே நோக்கமாகும்.

மிகச்சிறிய அணுக்கருக்களை மிக அதிக வேகத்தில் (கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில்) மோத செய்வதன் மூலம் பெரு வெடிப்பு நிகழ்ந்த பிறகு இருந்த சூழலை உருவாக்க முடியும் என்பதே இந்த ஆய்வு. இதன்படி மோதலின் பிறகு குவார்க்-குளூவான்-பிளாஸ்மா என்ற பருப்பொருள் உருவானது. இது பெருவெடிப்பு நிகழ்ந்து 1/1மில்லியன் நொடிப்பொழுதில் இருந்த சூழலை உண்டாக்கியது.

இதில் ஆக்சிஜன்-16 (16O) மற்றும் நியான்-20 (20Ne) ஆகிய அணுக்கருக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை அதிவேகத்தில் மோதுகையில் மிகக் குறுகிய நேரத்திற்கு நுண்துளி அளவில் ஈருருளை வடிவிலான பெருவெடிப்பு நிகழ்ந்து உயர்வெப்ப பொருட்கள் விரிவடைய தொடங்கியது. இதன் பிளாஸ்மாவை நேரடியாக பார்க்க முடியாது. ஆனால் பருப்பொருள் உருமாற்றத்தைக் கண்டறிவதன் மூலம் பிளாஸ்மாவின் நிலையை அறியலாம். அதாவது நேரடியாக பார்க்க முடியாத பொருளின் நிழல் மூலம் அதன் வடிவத்தை அறிவதற்கு ஒப்பாகும். இவ்வாய்வு பிரபஞ்சத்தின் புதிய தகவல்களை நமக்கு தரும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *