மகாராட்டிர அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர் வெடித்ததில் மூன்று பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

அமராவதி, ஆக.24 மகாராட்டிராவின் அமராவதியில் உள்ள அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர் வெடித்துச் சிதறியதில் புதிதாக பிறந்த 3 குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமராவதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று (24.8.2026) அதிகாலை 3.30 மணியளவில் 3 ஆவது மாடியில் பிறந்த குழந்தைகள் வைக்கப்பட்டிருந்த அறையில் வெண்டிலேட்டர் திடீரென வெடித்துச் சிதறியது. இதில், பயங்கரமாக வெளியேறிய தீ மற்றும் புகையினால் பாதிக்கப்பட்ட 3 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

இதனால், பதறிப்போன மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அவசரப் பிரிவிற்கு விரைந்து சென்று குழந்தைகளை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். 6 குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, அவசர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்நிகழ்வு தொடர்பாக மருத்துவமனைக்கு நேரில் சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *