பி.ஜே.பி. நிரந்தரமாக ஆட்சியில் நீடிக்க முடியாது லண்டனில் ராகுல் காந்தி கருத்து

Viduthalai
3 Min Read

அரசியல்

லண்டன், மார்ச்  8- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இங்கி லாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரு கிறார். அந்த நாட்டின் நாடாளு மன்ற வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் மத்தியில் நேற்று முன்தினம் (6.3.2023) உரையாற்றினர். தொடர்ந்து சாத்தம் ஹவுஸ் என்ற பெயரில் அழைக்கப் படுகிற சிந்தனை யாளர் பேரவையிலும் அவர் உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:-  இந்தியா விடுதலை அடைந்த காலகட் டத்தில் இருந்து தற்போது வரை காங்கிரஸ் கட்சிதான் பெரும்பாலான காலகட்டத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. பாஜ.க.வின் ஆட்சிக்கு முன் பாக நாங்கள்தான்  ஆட்சி நடத்தினோம். ஆனால், இந்தியாவில் நாம் ஆட்சி அதி காரத்துக்கு வந்து விட்டோம். நாம்தான் நிரந்தரமாக ஆட்சி செய்வோம் என்று பா.ஜ.க. நம்புகிறது. ஆனால் அது நடக் காது. இந்திய ஜனநாயகத்துக்கு தேவைப் படுகிற பழுதுபார்க்கிற பணியை எதிர்க்கட்சிகள் கூட்டாக மேற் கொள்ள முடியும். 

பெகாசஸ் மென்பொருள் 

காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத் தில் நாங்கள் நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தோம். ஆரம்பத்தில் நகர்ப்புறங்களைக் கவனிக்கத் தவறி விட்டோம். அது உண்மைதான். 

காங்கிரஸ் கட்சி தவிர்த்து அன்னிய ஊடகங்களும், இந்திய ஜனநாயகத்தில் தீவிரமான பிரச்சினைகள் இருப்பதை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடு கின்றன. எனது கைப்பேசியில் பெகா சஸ் உளவு மென்பொருள் இருந்தது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது இது நடக்க வில்லை. 

ஆர்.எஸ்.எஸ். மீது சாடல் 

ஆர்.எஸ்.எஸ்.சை ஒரு ரகசிய சமூகம் என்று நீங்கள் அழைக்கலாம். அது முஸ்லிம் சகோதரத்துவத்தின் பாதை யில் கட்டமைக்கப்பட்டுள்ளது, மேலும் ஜனநாயகப் போட்டியைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வருவதும், ஆட்சிக்கு வந்த பின்னர் ஜனநாயகப் போட்டியைத் தகர்ப்பதுவும்தான் அவர்களது எண் ணம். ஆர்.எஸ்.எஸ்., ஓர் அடிப்படை வாத, பாசிச அமைப் பாக செயல்படு கிறது. அது நாட்டின் நிறுவனங்களைக் கைப்பற்றுவதன் மூலம் இந்தியாவில் ஜனநாயகப் போட்டியின் தன்மையை மாற்றி உள்ளது. பத்திரிகைத்துறை, நீதித் துறை, நாடாளுமன்றம், தேர்தல் கமிஷன் என அனைத்து ஜனநாயக அமைப்புகளும் அழுத்தத்தின்கீழ் உள்ளன. அச்சுறுத்தலின் கீழ் இருக் கின்றன. ஒரு வழியில் அல்லது பிற வழியில் கட்டுப்படுத்தப்படுகின்றன. 

சீனா 

உட்கார்ந்திருக்கிறது…. 

இந்தியாவின் 2000 ச.கி.மீ. பகுதியில் சீனா உட்கார்ந்து கொண்டு இருக்கிறது. ஆனால் எங்கள் பிரதமர் அங்கு சீன நாட்டினர் இல்லை என்கிறார். அமெரிக்கா உடனான இந்திய உறவை சீனா அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அருணாசல பிரதேசம் மற்றும் லடாக் கில் உள்ள படை வீரர்களின் பின்னணி யில் உள்ள அடிப்படை அம்சம், உக்ரைனில் நடந்ததைப் போன்றது தான். இதை நான் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் தெரிவித்தேன். அவர் நான் சொன்னதை ஒப்புக்கொள்ள வில்லை. இது ஒரு வேடிக்கையான யோசனை என அவர் நினைக்கிறார். 

இவ்வாறு அவர் கூ றினார். 

காங்கிரஸ் ஊடகப் பிரிவின் தலைவர் பவன் கெரா டுவிட்டரில் வெளியிட்ட பதிலடியில், “வேலை இல்லாமல் இருக்கிற ஆளும் கட்சியின் தலைவர் ஒருவர் மீண்டும் வேலை பெற முயற்சிக்கிறார். அதைக் கவனிப்பதைக் காட்டிலும் வேடிக்கை ஒன்றும் இல்லை. எதிர்க் கட்சித் தலை வர்களின் அறிக்கைகளைத் திரிப்பதில் முழு நேர வேலையாக இருப்பவர்கள், தங்களுக் குப் பிடித்தமான ‘அப் கி பார், டிரம்ப் சர்க்கார்’ என்று முழங்கிய முழக்கத்தை மறந்து விடுகிறார்கள்” என கூறி உள்ளார். 

இந்த  முழக்கம்,  பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது ஹூஸ்ட னில் பேசு 

கையில்,  அப் போதைய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஆதர வாக கூறிய முழக் கம் ஆகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *