மதுரை, திருமங்கலம், இராஜபாளையம் ஆகிய ஊர்களில் தமிழர் தலைவர் பங்கேற்ற நிகழ்வுகள்

சிறப்பு புத்தக சலுகைகள்

திராவிடர் கழகம்

எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80ஆம் ஆண்டு மாநாட்டுக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்தனர்.

திராவிடர் கழகம்

“நீட்” தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் நடைபெறும் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்தை திருமங்கலத்தில் தொடங்கி வைக்க வருகை தந்த தமிழர் தலைவருக்கு பல்வேறு கட்சியினர் பயனாடை அணிவித்தனர்.

திராவிடர் கழகம்

இராஜபாளையம் மாநாடு சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த தோழர்கள் மாவட்ட ப.க அமைப்பாளர் முத்தரசன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மனோகரன், இராஜபாளையம் நகரச் செயலாளர் இரா.பாண்டி முருகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெத்தையா, பாவாணர் கோட்ட பொறுப்பாளர் நெடுஞ்சேரலாதன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *