எப்படி இருக்கிறது கதை? கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நகையை அணிந்த பூசாரி!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

நெல்லை, ஆக. 17– நெல்லை மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு பக்தர் ஒருவர் பஞ்சலோகத்தாலான சொரிமுத்து அய்யனார் உருவத்தை டாலராக செய்து பூசாரியிடம் வழங்கியதாகவும், இதனை பூசாரி அபகரித்து தனது கழுத்தில் அணிந்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் ஒளிப்படத்துடன் தகவல் வெளியாகி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த பக்தர், கோயிலுக்கு வழங்கிய பஞ்சலோகநகைக்கு பூசாரி உரிய ரசீது தரவில்லை என்றும் குற்றம்சாட்டி பதிவிட்டு இருந்தார்.

இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரியிடம் கேட்டபோது, “கோயிலுக்கு காணிக்கை வழங்கிய பக்தரிடம் பேசினேன். பஞ்சலோகத்தாலான சொரிமுத்து அய்யனார் உருவ டாலரின் மதிப்பு சுமார் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரையிலும் இருக்கும். இதுகுறித்து விசாரணை நடத்தி, தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தவறான தகவல்களை பரப்பி, கோயிலின் நற்பெயரை கெடுக்க வேண்டாம்” என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *