மாணவர்களுக்கு போராடும் உரிமை உண்டு! உச்ச நீதிமன்றம் கருத்து

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, ஆக. 15– அய்தராபாத்தில் உள்ள தேசிய சட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவுக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அழைக் கப்படுவதற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து துணை வேந்தருக்கு கடிதம் எழுதினர்.

இந்நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளில் மாணவர்கள் இறங்கினால், அவர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்ய முடியாது என்று, இந்திய பார் கவுன்சிலின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான மன்னன் குமார் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்ததோடு, தேசிய சட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 2026-ஆம் ஆண்டு மாணவர்களை மாநில பார் கவுன்சிலில் வழக்குரைஞர்களாக பதிவு செய்யக் கூடாது என்று ஒரு சுற்றறிக்கையும் அனுப்பினார். இது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், பார் கவுன்சில் அனுப்பிய சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது.

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் மூத்த வழக்குரைஞர் பரமேஷ்வர் மற்றும் வழக்குரைஞர்கள் முறையீடு செய்தனர்.

அப்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த், இது மாணவர் களுக்கும் தனக்குமான விவகாரம் என்றும், இதில் இந்திய பார் கவுன்சில் ஏன் தலையிட்டது? என கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் கூறியதாவது: மாணவர்களுக்கு போராடும் உரிமை உள்ளது, அவர்களை பார் கவுன்சிலால் தடுக்க முடியாது. நான் மாணவனாக இருந்த போதும் மாணவர்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன். ஜனநாயக முறையில் அமைதியாக போராடும் மாணவர்களை அனுமதிக்க வேண்டும். பார் கவுன்சிலோ, வேறு அமைப்புகளோ இதில் தலையிடத் தேவை இல்லை. மாணவர்கள் நேரடியாக எனக்கு கடிதம் எழுதலாம்.

தேசிய சட்டப் படிப்பு மாண வர்கள் தங்கள் படிப்பை முடித்து விரைவில் வழக்குரைஞராக பதிவு செய்ய வேண்டும். அவர் களை உடனடியாக சட்ட உதவி மய்யத்தில் பணி அமர்த்த தயாராக உள்ளேன். இவ்வாறு தெரிவித்த தலைமை நீதிபதி, பார் கவுன்சில் வெளியிட்ட சுற்றறிக்கை குறித்து விளக்கம் அளிக்க இந்திய பார் கவுன்சிலுக்கு அறிவிக்கை பிறப்பித்து உத்தரவிட்டார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *