அப்பாவுக்கு ஏதாவது நேர்ந்தால் யாரையும் விட மாட்டேன் – லாலு பிரசாத் யாதவின் மகள் எச்சரிக்கை

Viduthalai
1 Min Read

புதுடில்லி, மார்ச் 10- லாலு பிரசாத் யாதவிடம் சி.பி.அய். அதிகாரிகள் விசாரணை நடத்தியதை குறிப் பிட்டு, எங்க அப்பாவுக்கு ஏதாவது நேர்ந்தால் யாரையும் விட மாட் டேன் என்று லாலு பிரசாத் யாதவின் இரண்டவாது மகள் ரோகிணி எச்சரிக்கை செய்துள் ளார்.

கடந்த 2004–2009 காலகட்டத் தில்  காங்கிரஸ் தலைமையிலான அய்க் கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் ரயில்வே அமைச்ச ராக இருந்த லாலு பிரசாத் யாதவ், பீகாரை சேர்ந்த சிலருக்கு ரயில் வேயில் வேலை வாங்கி தருவதற் காக நிலத்தை லஞ்சமாக பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில், லாலுவின் மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது பிள்ளைகளிடம சி.பி.அய்.  அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து  லாலு பிரசாத் யாதவிடம் சி.பி.அய். அதிகாரிகள் விசாரணை நடத்தி னர். டில்லியில் உள்ள தனது மகள் மிசா பாரதி வீட்டில் லாலு பிரசாத் யாதவ் தற்போது வசித்து வருகி றார். சி.பி.அய். அதிகாரிகள் மிசா பாரதி வீட்டுக்கு சென்று லாலு பிரசாத்திடம் விசாரணை நடத்தி னர். 

இந்நிலையில், எனது தந் தைக்கு ஏதாவது நேர்ந்தால் யாரை யும் விடமாட்டேன் என லாலு பிரசாத்தின் இரண்டாவது மகள் ரோகிணி எச்சரிக்கை செய்துள் ளார். இது தொடர்பாக ரோகிணி டிவிட்டரில், எனது தந்தை துன்புறுத்தப்படும் விதம் சரியில்லை. அப்பாவை தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள்.  அவருக்கு ஏதாவது நடந்தால் நான் யாரை யும் விட மாட்டேன். இதெல்லாம் நினைவில் இருக்கும்.

 காலம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதை நினைவில் கொள்ள வேண்டும் என பதிவு செய்துள்ளார்.

 மேலும் மற்றொரு டிவிட்டரில், 74 வயது தலைவரான அவரை தொடர்ந்து  தொந்தரவு செய்தால் டில்லியின் அதிகாரத்தை அசைக்க முடியும். சகிப்புத்தன்மையின் வரம்புகள் இப்போது சோதிக்கப் படுகின்றன என பதிவு செய்துள் ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *